விஜய்யின் முதல் பட நடிகை தான் 'காலா' நாயகி: ஈஸ்வரிராவ் குறித்து ஒரு பார்வை

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை இணையதளங்களில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டாக உள்ளது.

இந்த நிலையில் 'காலா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் என்பவர் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. ரஜினி-ரஞ்சித்தின் முந்தைய படமான 'கபாலி' படத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத ராதிகா ஆப்தே, ரஜினிக்கு ஜோடியாக நடித்த நிலையில் இந்த படத்திலும் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத ஈஸ்வரிராவ் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் யார், எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் என்பதை பார்ப்போம்

நடிகை ஈஸ்வ்ரிராவ், விஜய் நாயகனாக நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்தில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம், அந்த படத்தில் வினுசக்கரவர்த்தியின் மகளாக ராணி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் ஈஸ்வரிராவ்

அதன் பின்னர் பாலுமகேந்திரவின் 'ராமன் அப்துல்லா', பிரகாஷ்ராஜின் 'குருபார்வை, 'சரத்குமாரின் 'சிம்மராசி;, வசந்த் இயக்கிய 'அப்பு, விஜயகாந்த் நடித்த 'தவசி', சிம்பு நடித்த சரவணா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த் நடித்த 'விரும்புகிறேன்' என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணசித்திர  நடிகை என்ற விருதையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட படங்களிலும், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத நடிகையாகவே இவர் இருந்துள்ளார். ஆனால் காலா படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் என்றும் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

கடைசி வரை நிறைவேறாமல் போன ஸ்ரீதேவியின் கடைசி ஆசை

நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் துபாயில் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்தினர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே! இதுக்கு என்ன அர்த்தம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சரண் அடைய சொல்லிவிட்டு சதி செய்துவிட்டார்கள்: மதுரை என்கவுண்டர் குறித்து உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரையில் நேற்று இருளாண்டி மற்றும் சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட என்கவுண்டர் என்றும்,

விக்ரம் மகன் துருவ் முதல் படம் குறித்த முக்கிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் தனது மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகம் செய்கிறார் என்பதும், அவருடைய முதல் படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

மதுரை என்கவுண்டரின் பின்னணி என்ன? திடுக்கிடும் தகவல்

இன்று மாலை மதுரையில் இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.