சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாச பிலிம்ரோல்: பெற்றோர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Thursday,July 30 2020]

சிறுவர்கள் விளையாட வாங்கிய விசிலில் ஆபாச ஃபிலிம் ரோல் இருந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியில் சிறுவர்கள் விசில் ஊதி விளையாடுவதற்காக பிலிம் சுருள் சுற்றப்பட்ட விசிலை வாங்குவது உண்டு. இந்த நிலையில் சூலூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று சிறுவர்கள் விசில் வாங்கி விளையாடிக் கொண்டிருந்தனர்

அப்போது அந்த விசிலை அவர்களுடைய பெற்றோர்கள் வாங்கி சோதனை செய்தபோது அந்த விசிலில் சுற்றப்பட்டிருந்த பிலிம் ரோலில் ஆபாச படம் இருப்பது தெரியவந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த விசில்களை வாங்கிய கடைக்காரரிடம் பெற்றோர்கள் முறையிட்டபோது, ’வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தமாக தங்களிடம் விசிலை விற்று செல்வார்கள் என்றும் அதில் என்ன பிலிம் சுருள் இருக்கின்றது என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் இப்போது தான் தங்களுக்கே அதில் ஆபாச படத்தில் இருப்பது தெரியவந்தது என்றும் தெரிவித்தனர் இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடைகளில் விசில்களை விற்பனை செய்த மொத்த வியாபாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்கள் விளையாடும் விசிலில் ஆபாச படம் பிலிம் சுருள் இருந்த விவகாரம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

ஆகஸ்ட் 12 இல் கொரோனா தடுப்பூசி???? வியப்பில் ஆழ்த்தும் ரஷ்யாவின் புது  அறிவிப்பு!!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள Gamaleya Research Institute of Epidemiology and Microbiology என்ற ஆய்வு நிறுவனம் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது

ஹர்திக் பாண்டே வெளியிட்ட குழந்தையின் புகைப்படம்: இணையதளங்களில் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும் நடாஷா என்ற நடிகைக்கும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

புதிய கல்விக்கொள்கை: குஷ்புவை அடுத்து கமல் ஆதரவு

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்வி கொள்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பும் ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

சாதாரண சைக்கிளை வைத்து தண்டவாளத்தில் சாகசம்!!! ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டு!!!

மிகப் பெரிய ரயில்வே போக்குவரத்துத் துறையைக் கொண்ட நாடு இந்தியா. பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள்

தமிழகம் வரை நீளுகிறதா கேரளத் தங்கக்கடத்தல் விவகாரம்!!! தீவிர விசாரணையில் என்.ஐ.ஏ!!!

கேரள அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக்கடத்தல் வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.