கமல் கட்சியின் நிர்வாகிகள் பட்டியல் வெளியாவது எப்போது?

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் ராமநாதபுரத்தில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் கமல், அதன் பின்னர் மதுரை, திண்டுக்கல், சிவகெங்கை மாவட்டங்களுக்கு சென்று மக்களை நேரில் சந்திக்கின்றார். 'நாளை நமதே' என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த அரசியல் பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை நமதே பயணத்தை முடித்த பிறகு கமல் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் பட்டியலை கமல் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கட்சியில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு என்ன பொறுப்பு வழங்கலாம் என மூத்த நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை செய்து வருவதாகவும், ஏற்கனவே முக்கிய உறுப்பினர்கள் அடங்கிய பட்டியலை கமலிடம் நற்பணி இயக்க பொறுப்பாளர்கள் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகுத்தறிவு அரசியல் பாதையில் செல்லும் கமல்ஹாசனின் கட்சி, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்குமா? மக்களின் நன்மதிப்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

More News

50 வருடங்களுக்கு முன் தமிழில் பிரச்சனை இல்லாமல் வெளிவந்த 'பத்மாவதி'

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'பத்மாவத்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

படைவீரன்: திரை முன்னோட்டம்

தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் வில்லனாக அறிமுகமான பிரபல பின்னணி பாடகர் விஜய்யேசுதாஸ் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் தான் 'படைவீரன்

9 வருடங்களுக்கு முன் இதே ஜனவரி 29ல்...சுசீந்திரனின் மலரும் நினைவுகள்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய முதல் படமான 'வெண்ணிலா கபடிக்குழு கடந்த 2009ஆம் ஆண்டு இதே ஜனவரி 29ல் தான் வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்தது.

வரி ஏய்ப்பு விவகாரம் நடிகை அமலாபால் கைதாகி விடுதலை

சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் நடிகை அமலாபால், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற கோல்டன் கோவிலில் நயன்தாரா

உலகப்புகழ் பெற்ற அமிர்தசரஸ் பொற்கோவிலில் நயன்தாரா சென்று வழிபட்டுள்ளார். கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவில் முன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.