10 வயதாக இருந்தபோது அமிதாப்புக்கு புரபோஸ் செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தான் 10 வயதாக இருந்தபோது அமிதாப்பச்சனிடம் ‘என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என புரபோஸ் செய்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தனது 80வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் சிறுவயதில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். தான் 10 வயதாக இருந்தபோது விமானப்படையில் தனது தந்தை வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நாங்கள் அப்போது அலகாபாத்தில் இருந்தோம் என்றும் கூறினார்.

அப்போது ஒருநாள் ராஜீவ் காந்தி மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் இந்திரா காந்தியின் அஸ்தியை கரைக்க அலகாபாத் வருவதாக எனது தந்தை கூறினார் என்றும் அப்போது நான் அமிதாப்பச்சனை சந்திக்க வேண்டும் என்று கூறியதற்கு என் தந்தை மறுத்து விட்டார் என்றும் கூறினார்.

அப்போது எனக்கு 10 வயது இந்த போது எங்கள் வீட்டின் அருகே தான் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அமிதாப்பச்சனிடம் அப்பாவுக்கு தெரியாமல் சென்று ’ஐ லவ் யூ, தயவு செய்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கேட்டேன். அப்போது அப்பா என்னை கோபமாக பார்த்தார். அந்த நேரத்தில் மற்றொரு அதிகாரி வந்து என்னை தூக்கி கொண்டு சென்றுவிட்டார் என்று தெரிவித்தார்.

அதன்பின்னர் 1994ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிறகு அடுத்த ஆண்டு வெற்றியாளருக்கு முடிசூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது மேடையில் அமிதாப்பச்சன் இருந்ததை பார்த்து நான் மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது அவர் எனக்கு உதவி செய்தார். அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது’ என்று தனது மலரும் நினைவுகளை நடிகை ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.

More News

'விக்ரம்' வசூல் சாதனையை முறியடித்த 'PS1'.. 'PS1' சாதனையை முறியடிக்கும் படம் எது? 

 100 ஆண்டுகால தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் படைத்த

நீ மட்டும் நாமினேஷனுக்கு வந்த... ஜிபி முத்துவின் ஆர்மி எச்சரிக்கை!

 நீ மட்டும் நாமினேஷனுக்கு வந்தால் உன்னை உடனடியாக வெளியேற்றி விடுவோம் என ஜிபி முத்துவின் ஆர்மியினர் சமூக வலைதளங்களில் தனலட்சுமிக்கு எச்சரிக்கை விடும் வகையில் பதிவு செய்து வருவது

' ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்'.. ரிஷப் ஷெட்டியின்  'காந்தாரா டிரைலர்

 சமீபகாலமாக கன்னட திரைப்படங்கள் பான் - இந்திய  திரைப்படங்களாக உருவாகி மிகப்பெரிய வசூலை பெற்று வருகின்றது என்பதும் அதற்கு 'கேஜிஎப்' 'மற்றும் கேஜிஃப் 2' படங்களே சான்று என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா ஆசை காட்டி நரபலி.. 56 துண்டுகளாக வெட்டி மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி!

சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரர் ஆக்கி காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி 2 பெண்களை நரபலி கொடுத்த தம்பதி மற்றும் போலி மந்திரவாதியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' : சென்சார் மற்றும் ரன்னிங் டைமின் அதிகாரபூர்வ தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் தொழில்நுட்ப பணிகள் முழுமையாக முடிவடைந்ததாக தகவல் வெளியானது.