வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு முயற்சி: நடிகை கொடுத்த புகாரினால் இருவர் கைது

  • IndiaGlitz, [Friday,July 13 2018]

நடிகைகளை வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு இழுக்க முயற்சித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருபவர் நடிகை ஜெயலட்சுமி. இவருக்கு கடந்த சில நாட்களாக ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்துள்ளது. அதில் நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல்  3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து  ஜெயலட்சுமி, தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது நடிகைகளை பாலியல் தொழிலுக்கு இழுக்கும் முயற்சி என்பதும், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து அவர்களது மொபைல் எண் மற்றும் புகைப்படங்களை எடுத்து ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் மெசேஜை அனுப்பியுள்ளதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி பாலியல் தொழிலுக்காக இந்த கும்பல் முக்கிய நடிகைகள் உள்பட சுமார் 56 பேர்களை தொடர்பு கொண்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள தகவல்களை திரட்டிய ஜெயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

More News

பிக்பாஸ் வீட்டில் மகத்தை கலாய்த்த 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது பரபரப்பாக்க அதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இன்று முதல் தொடங்குகிறது தனுஷின் இரண்டாவது முயற்சி

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து கொண்டிருந்த தனுஷ், கடந்த ஆண்டு 'பா.பாண்டி' என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.

கமல் ஒரு போலி பகுத்தறிவாதி: தமிழிசை செளந்திரராஜன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக கமல்ஹாசனும்,

அஜித்தை அடுத்து கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மோதும் நயன்தாரா

உலக நாயகன் கமல்ஹாசனின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது

அனிருத்துடன் இணைந்து இசையமைக்கும் இரட்டை இசையமைப்பாளர்கள் 

தமிழ்த்திரையுலகில் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பது என்பது புதிதல்ல. விஸ்வநாதன் - ராமமூர்த்தி பல ஆண்டுகளாக இணைந்து இசையமைத்தனர்.