வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை! இருப்பினும் ஒரு சிறு ஆறுதல் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,February 01 2018]

மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் 2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒருவிஷயம் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து மாற்றம் இருக்கும் என்பதுதான். ஆனால் இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது ஒரு ஏமாற்றமே.

இருப்பினும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒருசிறு ஆறுதலை அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார். இதன்படி கடந்த 1974ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையான கழிவுத் திட்டத்தை மீண்டும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இந்த கழிவுத்திட்டத்தை கடந்த 2006ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சர்ப.சிதம்பரம் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

நிலையான கழிவுத்திட்டம் குறித்து ஒருசிறு விளக்கம்:

நிலையான கழிவு திட்டம் என்பது ஒருவரின் மொத்த வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் நமது உறவினர்களுக்கும், மருத்துவ செலவிற்கும் செய்த செலவை கணக்கு காட்ட அவசியமில்லை. இந்த வகையில் இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான கழிவுத்திட்டத்தின்படி வருடம் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் வரை கணக்கு காட்டிக்கொள்ளலாம். இரு சக்கர வாகனங்கள், கார்கள் வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் போட்ட கணக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்த கணக்கு ஆகியவையும் நிலையான கழிவுத்திட்டத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம்.

பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார்.

ஊட்டியாக மாறிய சென்னை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் அடித்து வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இன்னும் கொஞ்சம் சேர்த்து பேசியிருக்கணும்: 'நாச்சியார்' வசனம் குறித்து ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, அந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்டவார்த்தை ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது.