இந்த இரண்டை மட்டும் என்னால் மறக்க முடியாது: மலரும் நினைவுகளில் வெங்கட்பிரபு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 600028 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று காலை இதுகுறித்து வெங்கட்பிரபு பதிவு செய்த ஒரு டுவீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தை பாராட்டி இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஆகியோர் எழுதிய கடிதங்களை பதிவு செய்து இதைவிட ஒரு இயக்குனருக்கு என்ன வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் ‘சென்னை 600028’ குறித்து தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புள்ள வெங்கட் பிரபு அவர்களுக்கு, முதற்கண் எனது இதயபூர்வமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களது ’சென்னை-28’ படத்திற்கு. லகான் தங்களுக்கு ஒரு ஆரம்பபுள்ளி வைத்திருக்கிறது என்றாலும் எத்தனை தமிழ் சினிமா பிரபலங்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது நான் உள்பட

உங்களால் தான் அது முடிந்திருக்கிறது. அந்த வயது பிள்ளைகள் இப்படித்தான் அதிரடி அட்டகாசங்களை செய்வார்கள். தண்ணி அடிப்பார்கள். லவ் பண்ணுவார்கள். அந்த லவ் ராவ்வாகத்தான் இருக்கும். சினிமாத்தனமான எதுகை மோனையோடு டூயட் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்னும் இன்ன பிற விஷயங்களில் உங்களது நேர்மையான பார்வை என்னை மிக மிக கவர்ந்தது

சலிப்போ அலுப்போ இல்லாத ஒரு குறையுமின்றி கதை அமைப்பும் வசனங்களும் அந்த வயது விடலை போலவே துள்ளி திரியும் கேமராக் கோணங்களும் பார்த்தபோது தேர்ச்சி பெற்ற ஒரு செல்லுலாய்டு மாணவனின் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு திரைப்படம் போல் எனக்கு தோன்றியதில் வியப்பில்லை

யுவனின் இசை பெரிதாக கைகொடுத்திருக்கிறது. உங்களுடன் ஒத்துழைத்த சகோதர நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். எஸ்பி சரணுக்கு இனி ஒரு மகுடம். மிகப் பெரிய எதிர்காலம் தங்களை நோக்கி காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை’ என்று கே பாலசந்தர் தெரிவித்துள்ளார்

அதேபோல் பாரதிராஜா அவர்கள் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்‌ சினிமா என்றுமே புதிய தலைமுறைகளால்தான்‌ புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. பிரபு, பிரேம்‌, யுவன்‌, சரண்‌ போன்ற இளைஞர்களால்‌ அது தற்போது மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. சென்னை 600028 அதை உறுதி செய்திருக்கிறது. இந்திப மக்களின்‌ தேசிப உணர்வாய்‌ ஆகிவிட்ட கிரிக்கெட்‌ எனும்‌ விளையாட்டினூடே சென்னை நகர நடுத்தர இளைஞர்களின்‌ வாழ்வியலை நட்பு பாசம்‌ காதல்‌ எனும்‌ உணர்ச்சிகளோடு கலந்து இளமை ததும்ப கொடுத்திருக்கும்‌ வெங்கட்‌ பிரபுவை முதலில்‌ பாராட்டுகிறேன்‌.

ஆரம்பம், வளர்ச்சி, முடிவு என்று, திரைக்கதை இலக்கணத்தின்‌ எந்த கட்டுக்குள்ளும்‌ அடங்காமல்‌ சுவராஸ்யம்? என்னும்‌ மக்களின்‌ ஒரே ரசனைக்கு வெளிவந்து வெற்றி பெற்றிருக்கிற எண்ணற்ற திரைப்படங்களின்‌
வரிசையில்‌ இததிரைப்படத்தின்‌ காட்சிகளை இயல்பாய்‌ அமைத்திருப்பது ரசிக்கதக்கதோரு பாராட்டுக்குரிய ஒன்றாகும்‌. பத்துக்கும்‌ மேற்பட்ட கதாபாத்திரங்களை திரையில்‌ பற்றுடன்‌ ஒவ்வொருவரையும்‌ தனித்தன்மையுடன்‌ காண்பித்து, அவர்களின் செயல்களின்‌ மூலம்‌ குணாதிசிபங்களின்‌ மூலம்‌ நம்மை மகிழ்வித்து நெடுநாட்களுக்கு நம்‌ மனதில்‌ நிலைக்க செய்துவிட்ட திரைக்கதையாசிரியரை நிச்சயம்‌ பாராட்ட வேவேண்டும்‌.

கதாபாத்திரங்கள் மிகப்படுத்தாமல் இயல்பாய் பேசுவதும் காட்சிகள்‌ எளிமையாய்‌ இருப்பதும்‌, அதற்கு ஒளிப்பதிவும்‌ இசையும்‌ பலம்‌ சேர்த்திருப்பதும்‌ பிரபுவுக்கு சாதகமான விஷயங்களாக அமைந்திருக்கின்றன. இளையராஜா, அமரன், பாஸ்கர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் எழுபதுகளில் சென்னையின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித்திரிந்த ஞாபகங்களை எங்களுக்குள் துளிரிவிட்ட நட்பை அப்போதைய எங்கள் சந்தோஷத்தை இத்திரைப்படம் மீண்டுமொரு முறை எனக்குள் கிளர்ந்தெழச்செய்தது போல்‌ எனது நணிபர்களுக்கும்‌ ஏற்பருத்தியிருக்கும்‌ என்று நம்புகிறேன்‌.

எங்கள்‌ மடியில்‌ தவழ்ந்த பிள்ளைகள்‌ இன்றைக்கு எங்களுக்கு வாழ்வளித்த இதே திரைத்துறையில்‌ விழுதுகளாய்‌ படர்ந்து வேரூன்றுவதை கண்டு மனம்‌ நெகிழ்கிறேன்‌.

பொத்திவச்ச மல்லிகை மொட்டாய்‌ மறைந்திருந்த இவர்களின்‌ திறமைகள் இன்னும்‌ பல திசைகளில்‌ பரவி பூவாக நறுமணம்‌ வீசி தமிழ்‌ சினிமாவை உலக அரங்கில்‌ கொண்டு சேர்க்கட்டும்‌ என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு பாரதிராஜா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

More News

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்: விஜய் ரசிகருக்கு மாளவிகா மோகனன் பாராட்டு

விஜய் நடித்த மாஸ்டர்' படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த பதிவில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்

2025ஆம் ஆண்டு வரை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்: டிசிஎஸ் அதிரடி முடிவு?

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையை கையாண்டு வருகின்றன

தமிழகத்தில் இன்று 52 பேர்களுக்கு கொரோனா: அபாய கட்டத்தில் சென்னை

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளதாகவும்

கொரோனா பாதிப்பால் அதிர்ச்சி: 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி அவர்களது மன அழுத்தத்தை போக்குவதற்கும்

துல்கர் சல்மானுக்கு ஆதரவாக கருத்த தெரிவித்த தமிழ் நடிகர்

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து தயாரித்த 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்