விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

தமிழக அரசியலில் ஆளுமை நிறைந்த தலைவர்களாக இருந்த முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்களின் மறைவிற்கு பின்னர் பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் வரிசையில் விரைவில் விஜய் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 'சர்கார்' ஆடியோ விழாவிற்கு பின் அரசியல்வாதிகள் பலர் விஜய்யை விமர்சித்து வருவதால், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாபநாசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ''விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியதோடு, விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் தான் விரும்புவதாகவும் அவர் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர பல ஆண்டுகளாக எஸ்.ஏ.சி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.