தமிழர் பிரதமரானால் இந்தி பேசியே ஆகவேண்டுமா? சுஷ்மாவிடம் சசிதரூர் வாக்குவாதம்

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், இதற்காக 40 கோடி ரூபாய் அல்ல, ரூ.400 கோடி செலவழிக்கக்கூட மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று மக்களவையில் பேசினார். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அவையில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றியதை சுஷ்மா நினைவுகூர்ந்த சுஷ்மா, ஐநா அவையில் இந்தியை அலுவல் மொழியாக்க பல நாடுகளின் ஆதரவு பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்

இந்த நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அவையில் பணியாற்றியவர் என்ற முறையில் கருத்து கூறிய சசிதரூர், 'ஐநா அவையில் இந்தி அலுவல் மொழியாக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி இல்லை என்றும், அந்த மொழி இந்தியாவில் அலுவல் மொழியாக மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்தியை எதிர்க்கும் தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் பிரதமர் அல்லது வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டால் அவர் இந்தி மொழியை பேசியே ஆகவேண்டும் என்ற சூழலை ஏன் ஆளாக்க வேண்டும் என்று கூறிய சசிதரூர், இந்தி பேசும் மக்களின் பெருமையை தான் புரிந்துகொள்வதாகவும், அதேநேரம், இந்தி பேசாத இந்நாட்டு மக்களும் இந்தியர் என்பதில் பெருமைகொள்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

More News

ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறேன்: டி.இமான்

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும்

விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றியா? கமலுக்கு தினகரன் கண்டனம்:

விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று கூறிய கமல்ஹாசனுக்கு ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி, நிவேதா பேதுராஜ் நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள டிக் டிக் டிக்' திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சிறப்பாக நடந்தது.

இதுதான் உண்மையிலேயே கீழ்த்தரமான அரசியல்: விஜய்சேதுபதி

கடந்த 2 ஆண்டுகளாக அதிக படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வரும் விஜய்சேதுபதிக்கு இந்த ஆண்டு குறைந்தது பத்து படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒன்றுதான் சூப்பர் டீலக்ஸ்'

கருணாநிதியை அடுத்து ரஜினி சந்தித்த மூத்த அரசியல்வாதி

இன்று ரஜினிகாந்த், எம்ஜிஆர் காலத்தில் அரசியலில் இருக்கும் பழுத்த அரசியல்வாதியும், ரஜினியின் 'பாட்ஷா' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்தவருமான ஆர்.எம்.வீரப்பன் அவர்களை சந்தித்தார்.