சீனாவை திட்டியது போதும்... வுஹானுக்கு முன்பே கொரோனா வைரஸ் இந்த நாட்டிலும் இருந்தது: கொளுத்திப் போட்ட புதுத்தகவல்!!!

  • IndiaGlitz, [Sunday,June 21 2020]

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து மூலை முடுக்குகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் சூழ்ச்சிதான் இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் எனவும் சில நாடுகள் சீனா மீது குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலில் அறியப்பட்டதாக உலகச் சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில் வுஹான் மாகாணத்திற்கு முன்பே இத்தாலியில் கொரோனா வைரஸ் இருந்தது என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

வுஹானுக்கு முன்பே வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் தூரின் நகரத்தின் சாக்கடை நீரில் கொரோனா வைரஸ் இருந்தது என்பதற்கான ஆதாரம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அந்நாடின் தேசிய சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் ஒருவேளை வுஹான் நகரத்துக்கு முன்பே கொரோனா வைரஸ் இத்தாலியைத் தாக்கி இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். காரணம் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார். சரியாக இத்தாலியில் புதிய கொரோனா வைரஸ் தாக்கியதாகக் கூறப்பட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அங்கு கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் மிலன் நகரில் கடந்த அக்டோபர் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலும் கிட்டத்தட்ட 40 இடங்களில் கழிவு நீரை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். அதில் மிலன் நகர சாக்கடை நீரில் சார்ஸ் கோவிட் வைரஸ் இருப்பதற்கான அறிகுறி இருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுகுறித்து முழுமையான ஆய்வுத் தகவல் இன்னும் வெளியாக வில்லை. அடுத்த வாரத்தில் இந்த ஆய்வு வெளியிடப்படும் எனவும் எதிர்பாக்கப் படுகிறது.

More News

வந்துவிட்டது கொரோனாவுக்கு புதிய சிகிச்சை மருந்து: இந்திய மருந்து நிறுவனம் சாதனை!!!

கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கிளென்மார்க் என்ற நிறுவனம் கொரோனாவின்

நாளை வெளியாகிறது விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ: அதிரடி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடி வருவது தெரிந்ததே. ஜூன் 22ஆம் தேதி மட்டுமின்றி ஜூன் மாதம் முழுவதுமே

முதல்முறையாக 2500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: உயிர்ப்பலியும் 50ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டி வரும் நிலையில் இன்று 5வது நாளாக 2000ஐ தாண்டியது மட்டுமின்றி முதல்முறையாக 2500ஐ தாண்டியுள்ளதால் பெரும்

'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியுடன் ஒர்க்-அவுட் செய்யும் பிரபல தமிழ் ஹீரோ

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'

சீன தாக்குதல் விவகாரம்: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேட்ட 3 கேள்விகள்

இந்தியா மற்றும் சீன எல்லையில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.