திமுக, அதிமுக செய்யாததை செய்து காட்டிய சின்ன கிராமம்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போது வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், வயல்களில் உள்ள பயிர்கள் அழிவதும்,  மழை நின்ற ஒருசில மாதங்களில் குடிதண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை கையேந்தும் நிலையும் தொடர்கதையாகி வருகின்றது.

மழை நீரை சேமித்து ஏரி, குளங்களில் சேர்க்க வடிகால் அமைக்கவும், ஏரி குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆளும் அதிமுக, திமுக இந்த கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. எனவேதான் தமிழகம் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளிப்பதும், கோடை காலங்களில் தண்ணீருக்காக கையேந்துவதுமாக உள்ளது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை என்ற கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் அவர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, குளங்களை தூர் வாரியும் உள்ளனர். சுமார் 2500 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் ஊருக்குள் தண்ணீர் செல்லும் வழியை ஒழுங்குபடுத்தியது மட்டுமின்றி வயல்களில் உள்ள பயிர்கள் மூழ்காமல் இருக்க பாசன வடிகால் வாய்க்கால்களையும் அமைத்துள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் கிராமத்தில் தண்ணீர் தேங்காமல் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்கின்றது. இதனால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுவதில்லை.,

இந்த கிராமத்தை ஒரு முன்னுதராணமாக எடுத்து கொண்டு தமிழகத்தில் உள்ள மற்ற கிராமங்களும் செயல்பட்டால் தமிழகத்தில் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் முதல்வர் ஆவது ஷங்கர் கையில்தான் உள்ளது. செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் செல்லூர் ராஜூ அளவுக்கு சமூக வலைத்தளங்களில் யாரும் கலாய்க்கப்பட்டிருக்க மாட்டார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

கமல்-ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்கள் என்றாலே அதன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதை சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும்.

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: நன்றி கூறிய நடிகர் ஜெய்

தளபதி விஜய் நடித்த அதிரடி ஆக்சன் படமான 'பகவதி' எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த படத்தில் விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார்

மதுசூதனன் முன்னாள் முதலமைச்சரா? செல்லூர் ராஜூவின் அடுத்த உளறல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் அவ்வபோது கொடுக்கும் பேட்டியிலும், பொதுக்கூட்டங்களில் பேசிவரும் பேச்சுகளிலும் உளறல்கள் இருப்பதை அவ்வபோது

தீவிரவாதம் என்றால் என்ன? கமல் கருத்துக்கு அரவிந்தசாமி விளக்கம்

கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பாஜக, மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உபி மாநிலத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.