இ-பதிவு முறையில் திருமண நிகழ்வு சேர்க்கப்பட்டது...! ஆனால் புதிய நிபந்தனைகளுடன்...?

  • IndiaGlitz, [Wednesday,May 19 2021]

திருமணத்திற்கு இ-பதிவு முறையை பயன்படுத்துவதில் புதிய நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இ- பதிவில் திருமணத்திற்காக பதிவிடுபவர்களுக்கு, பத்திரிக்கையில் இருக்கும் அனைவரின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பத்திரிக்கையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-சான்றிதழ் பெறமுடியும்.

திருமணத்திற்கான இ-பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக மணமகள், மணமகன், தாய், தந்தை உள்ளிட்டோர் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும். ஒருவரின் திருமண நிகழ்விற்கு, ஒரு இ-பதிவு சான்றிதழ் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

அந்த இ-பதிவில் பத்திரிக்கையில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். திருமணத்தில் பயன்படுத்தக்கூடிய வண்டிகளின் எண்கள், ஓட்டுநர் பெயர், கைபேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதேபோல் வாகனங்களில் பயணம் செய்யக்கூடிய நபர்களின் பெயரையும், அவர்களின் அடையாள அட்டையையும் பதிவிட வேண்டும். முக்கியமாக பொய்யாக பத்திரிக்கை தயாரித்து பதிவிட்டு இருந்தால், நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

More News

கொரோனாதேவிக்கு சிலை...! குட்டி உபி-யாக மாறுகிறதா கோவை....கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

கோவையில் கொரோனா தொற்று குணமாகும் என்ற சூழலில், கொரோனா தேவி என்ற சாமி சிலையை வடிவமைத்துள்ளனர் கிராம மக்கள்.

ஹேக்கர் கேரக்டரில் நடித்த தமன்னா: நாளை ரிலீஸ்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா நடித்து முடித்துள்ள தொடர் 'நவம்பர் ஸ்டோரி'. இந்த தொடரின் படப்பிடிப்புகள் முடிவடைந்து மே 20ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில்

தடுப்பூசி போட்டு கொண்டது உண்மையா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா தரப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் சென்று தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றும்

'த்ரிஷ்யம்' குட்டிப்பாப்பாவா இது? வைரலாகும் கிளாமர் வீடியோ!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தமிழ் உள்பட கிட்டத்தட்ட

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி… முக்கியத் தகவல்!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.