பணிக்கு திரும்புவோம், ஆனால் பயணிகளிடம் காசு வாங்க மாட்டோம்: போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். குறிப்பாக அலுவலகங்கள் சென்று வருபவர்கள், மாணவர்கள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றும், போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. நீதிமன்றமும் போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

இந்த நிலையில் தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்றும் அப்படியே கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்பினால் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் வசூலிக்க மாட்டோம்' என்றும் போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அரசு செய்வதறியாது திகைத்துள்ளதாக கூறப்படுகிறது