இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம். ஜனாதிபதியை சந்தித்த பின் தம்பித்துரை பேட்டி

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்ட வரைவு மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக நேற்றே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தம்பித்துரை தலைமையில் அதிமுக எம்.பி க்கள், ராஷ்ட்ரபதி பவனுக்குச் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் ஜனாதிபதியிடம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பித்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இன்று மாலை முதல் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கும் வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.

இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுனர் சென்னை வரவுள்ளதாகவும், அவர் இன்று மாலையில் அவசர சட்டம் குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக...

மெரீனா போராட்டத்தில் சகாயம். இளைஞர்கள் உற்சாக வரவேற்பு

முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல்கலாமுக்கு பின்னர் இளைஞர்கள் பெரிதும் மதிக்கும் ஒரு நபராக கருதப்படுபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவருடைய நேர்மை, துணிவு மாணவர்களை ஈர்த்தது...

உங்களை உலகமே பின்பற்ற போகிறது. இளைஞர்களுக்கு இசைஞானி வாழ்த்து

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம், அலங்காநல்லூர், உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுத்த விக்கீபிடியா

ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூர் போன்ற ஒருசில இடங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டை, தடை செய்ய வேண்டும் என்று பீட்டா எடுத்த நடவடிக்கை காரணமாக இன்று உலகம் முழுவதும் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்பதை தெரியவைத்துவிட்டது.

தமிழக அரசின் அவசர சட்டத்தில் காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு

ஜல்லிக்கட்டுக்காக தற்போது இயற்றப்படவுள்ள அவசர சட்டம் நிரந்தர தீர்வு ஆகாது என்றும் இந்த வருடம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த உதவும் என்றும்...