close
Choose your channels

நயன்தாராவுக்கு பெயர் வைத்ததே நான் தான்: பழம்பெரும் நடிகை பேட்டி

Friday, June 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழ் பெற்றது மட்டுமின்றி அவரது படங்கள் நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ரஜினியுடன் 'தர்பார்', 'விஜய்யுடன் 'பிகில்', சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு தொடக்கமே 'விஸ்வாசம்', என்ற வெற்றிப்படத்துடன் தொடங்கியது

இந்த நிலையில் நயன்தாராவுக்கு 'நயன்தாரா' என்ற் பெயரை தேர்வு செய்ததே நான் தான் என பழம்பெரும் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை சீமா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டு 'Manassinakkare' என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான போது, அவரய்ஜி இயற்பெயரான டயானா என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் சத்யன் விரும்பவில்லை. இதனையடுத்து அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சீமாவிடம் இயக்குனர் சத்யன், நயன்தாராவுக்காக ஒரு நல்ல பெயரை தேர்வு செய்யுமாறு கேட்டு கொண்டதாகவும் அதன்பின்னர் ஒருசில பெயர்களை பரிசீலித்த பின்னர் நயன்தாரா என்ற பெயரை தான் சொன்னதை இயக்குனர் ஏற்றுக்கொண்டதாகவும் நடிகை சீமா அந்த பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாரா என்றால் பெரிய ஸ்டார் என்று அர்த்தம் என்றும், பெயருக்கேற்றவாறே அவர் இன்று பெரிய ஸ்டாராக இருப்பதாகவும் சீமா மேலும் அந்த பேட்டியில் தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment