நயன்தாராவுக்கு பெயர் வைத்ததே நான் தான்: பழம்பெரும் நடிகை பேட்டி

  • IndiaGlitz, [Friday,June 28 2019]

இன்று தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழ் பெற்றது மட்டுமின்றி அவரது படங்கள் நல்ல ஓப்பனிங் வசூலையும் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ரஜினியுடன் 'தர்பார்', 'விஜய்யுடன் 'பிகில்', சிரஞ்சீவியுடன் 'சயிர நரசிம்மரெட்டி போன்ற படங்களில் நடித்து வரும் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு தொடக்கமே 'விஸ்வாசம்', என்ற வெற்றிப்படத்துடன் தொடங்கியது

இந்த நிலையில் நயன்தாராவுக்கு 'நயன்தாரா' என்ற் பெயரை தேர்வு செய்ததே நான் தான் என பழம்பெரும் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான நடிகை சீமா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டு 'Manassinakkare' என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமான போது, அவரய்ஜி இயற்பெயரான டயானா என்ற பெயரை பயன்படுத்த இயக்குனர் சத்யன் விரும்பவில்லை. இதனையடுத்து அந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த சீமாவிடம் இயக்குனர் சத்யன், நயன்தாராவுக்காக ஒரு நல்ல பெயரை தேர்வு செய்யுமாறு கேட்டு கொண்டதாகவும் அதன்பின்னர் ஒருசில பெயர்களை பரிசீலித்த பின்னர் நயன்தாரா என்ற பெயரை தான் சொன்னதை இயக்குனர் ஏற்றுக்கொண்டதாகவும் நடிகை சீமா அந்த பேட்டியில் கூறியுள்ளார். நயன்தாரா என்றால் பெரிய ஸ்டார் என்று அர்த்தம் என்றும், பெயருக்கேற்றவாறே அவர் இன்று பெரிய ஸ்டாராக இருப்பதாகவும் சீமா மேலும் அந்த பேட்டியில் தெரிவித்தார்

More News

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் 'ஜீனியஸ்' ஹீரோ!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 'அசுரன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்

நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டவுள்ளது

திடீரென டிரண்டுக்கு வந்த சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாலும் அதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் ரிலீசில் முந்திவிடும்போல் தெரிகிறது

லாஸ்லியா என்ன சொல்லபோகுதோனுக்கு திக் திக்குனு இருக்கு: பிரபல நடிகையின் டுவீட்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டும்

இந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

இந்திய அணி இனிவரும் போட்டிகளில் வேண்டுமென்றே தோல்வி அடைந்து எங்களை அரையிறுதிக்கு வரவிடாமல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி குற்றஞ்சாட்டியுள்ளார்.