கமல் டிரம்ப்பை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ராகுல்காந்தியின் தாயாரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் பிரமுகர்களே ராகுல், சோனியாவை அரிதாகவே சந்தித்து வரும் நிலையில் அடுத்தடுத்து ராகுல், சோனியாவை கமல் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கமல்-சோனியா சந்திப்பு குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவருடைய உரிமை. கமல் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்தாலும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களை பொருத்தவரையில் மக்கள் ஆதரவு முழுமையாக உள்ளது என்று கூறினார்

அதேபோல் இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறிய திமுக பிரமுகர் துரைமுருகன், 'கமல் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். தன்னுடைய கட்சியின் விளம்பரத்திற்காக அவர் இதுபோன்ற சந்திப்பை நடத்தி வருகின்றார். இந்த ஒரு சந்திப்பை வைத்து இருவரும் கூட்டு சேர்வார்கள் என்பதை முடிவு செய்ய முடியாது' என்று கூறினார்.

More News

'தமிழ்ப்படம் 2.0' படத்தின் டைட்டில்  திடீர் மாற்றம்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வரும் 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் 'த மஸ்கிட்டோ பிலாஸபி '

நடிகையும் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் 'த மஸ்கிட்டோ பிலாஸபி 'என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

மும்தாஜை கதறி அழவைத்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோ வீடியோவை தான் நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கு கிடைக்கும் ஆதரவும் பதிவு செய்யப்படும் கமெண்ட்டுகளும் இதனை உறுதி செய்கிறது.

ஆரவ்வுடன் மீண்டும் காதலா? வைரலாகும் ஓவியா புகைப்படம்

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக  வேண்டுமானால் ஆரவ் இருக்கலாம்

தளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்

தளபதி விஜய் பிறந்த நாள் நாளை அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.