close
Choose your channels

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்: சொன்னது யார் தெரியுமா?

Monday, April 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களும் காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசியம் குறித்து கருத்து கூறினர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து கூறிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், 'தமிழகத்தில் முழு அடைப்பு விடுக்கப்பட்டுள்ள அதே ஏப்ரல் 5ஆம் தேதி கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்தப்போவதாகவும், எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment