ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்: சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களும் காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசியம் குறித்து கருத்து கூறினர்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து கூறிய ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ், 'தமிழகத்தில் முழு அடைப்பு விடுக்கப்பட்டுள்ள அதே ஏப்ரல் 5ஆம் தேதி கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்தப்போவதாகவும், எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்

 

More News

மெரீனாவில் திடீரென மூடப்பட்ட சர்வீஸ் சாலை: நடைப்பயிற்சி செல்வோர் அதிர்ச்சி

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில் எந்த நேரத்திலும் மீண்டுமொரு மெரீனா போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

யார் இந்த பிங்கி லால்வானி? விஜய் மல்லையாவின் 3வது மனைவியா?

62 வயதாகும் விஜய் மல்லையாவையை திருமணம் செய்ய போவதாக கூறப்பபடும் பிங்கி லால்வானி விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக பணிபுரிந்துள்ளார்.

இந்தியாவின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பிரபல ஆங்கில நாளிதழ் இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்கள் என்ற 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 78வது இடத்தில் உள்ளார்.

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார்.

பழம்பெரும் இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். மறைந்த பழம்பெரும் இயக்குனருக்கு கோலிவுட் திரையுலக பிரபலங்கல் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

காவிரிக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம்: நாசர், பொன்வண்ணன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்களும், போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில் நடிகர் சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.