அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் நற்பணி மன்றம் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,September 14 2017]

தளபதி விஜய் மாணவர்களின் கல்வி உள்பட பல்வேறு உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் அரியலூர் மாணவி ரங்கீலா என்பவரின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாக பொய்யான வாக்குறுதி கூறி ஏமாற்றியதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் விஜய் நற்பணி மன்றம் இதுகுறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரியலூர் மாவட்ட மாணவி ரங்கீலாவுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய ஜோஸ்பிரபு என்பவர் விஜய் நற்பணி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், அவர் அளித்த வாக்குறுதிகள் குறித்து இயக்கத்தின் உள்ளூர் நிர்வாகிகள் உள்பட யாருக்கும் தெரியாது என்றும், இதுகுறித்து ஒருசில ஊடகங்கள் விஜய் நற்பணி இயக்கமே ஏமாற்றியதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது

மேலும் மாணவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தளபதியும் அவரது ரசிகர்களாகிய நாங்களும் மாணவி ரங்கீலாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது கல்வி தொடர நிதியுதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளக்க அறிக்கையை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது

More News

நான் சொன்னபடி சசிகலா கேட்டிருந்தால்: டி.ராஜேந்தரின் விறுவிறுப்பான பேட்டி

அரசியல் களத்தில் அவ்வப்போது புயலை கிளப்பிவிட்டு செல்லும் டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, 'நான் சொன்னதை சசிகலா கேட்டிருந்தால் இன்று அவர் குளுகுளு அறையில் இருந்திருப்பார்

பிரபல இயக்குனரின் பாராட்டை பெற்ற விஷாலின் 'துப்பறிவாளன்'

விஷால் நடித்த துப்பறிவாளன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆப்பிள் ஐபோனின் அதிகாரபூர்வ இணையதளத்தில் 'விவேகம்'

உலகின் நம்பர் ஒன் ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் நிறுவி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் ஆப்பில் ஐபோன் 8 மற்றும் ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஆர்டர் செய்ததோ ஸ்மார்ட்போன், வந்ததோ சோப்புக்கட்டி

தற்போதைய டெக்னாலஜி உலகில் பெரும்பாலான பொருட்கள் இகாமர்ஸ் இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களும் அதன் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

கைதான தமிழ்கன் அட்மினின் காமக்கதைகள்

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் தீவிர முயற்சியால் தமிழ்கன் அட்மின் கெளரிசங்கர் நேற்று கைதானார் என்பது தெரிந்ததே.