சங்கத்தலைவனுடன் இணையும் விஜே ரம்யா

  • IndiaGlitz, [Tuesday,November 07 2017]

பிரபல தொலைக்காட்சி விஜே ரம்யா சுப்பிரமணியம், திரைப்படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி, சூர்யாவின் 'மாஸ்', ஜெயம் ரவியின் 'வனமகன்' போன்ற படங்களில் நடித்த ரம்யா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சங்கத்தலைவன்' என்ற படத்தில் ரம்யா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மணிமாறன் என்பவர் இயக்கும் இந்த படம் சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களின் பிரச்சனையை அலசும் படம் என்றும் இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி கைத்தறி நெசவாளர் சங்கத்தலைவராக நடிக்கின்றார்.

வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், வெங்கடேஷ் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். இந்த படத்தில் நடிக்கும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது.

More News

கட்சி தொடங்க யாராவது தொண்டர்களிடம் பணம் கேட்டதுண்டா? அமைச்சர் ஜெயக்குமார்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ரசிகர்கள் முன் பேசியபோது 'நான் கட்சி தொடங்க எனக்கு என் ரசிகர்கள் பணம் கொடுப்பார்கள், அவர்களே என் தொண்டர்கள். அவர்கள் இருக்கும்போது எனக்கு கவலை எதற்கு?

பொதுமக்களும் வானிலையை கணிக்கலாம்: தமிழ்நாடு வெதர்மேன்

ஒரு காலத்தில் வானிலை அறிக்கை என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வரும் பெயர் ரமணன் அவர்கள் தான். மழைக்காலத்தில் அவர்தான் மக்களின் ஹீரோவாக இருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசனின் புதிய குடும்ப உறுப்பினர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜனவரி முதல் ஒவ்வொரு அறிவிப்பாக வரும்: அரசியல் வருகை குறித்து கமல் பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை அடுத்து தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கமல் அறிமுகம் செய்துள்ள விசில்: இன்று முதல் ஆரம்பம்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு செயலி ஆரம்பிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி அவர் சற்றுமுன்னர் அந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார்