விஜே சித்ரா வழக்கில் கணவர் விடுதலை.. தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை அருகே ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது குறித்து சித்ராவின் கணவர் ஹேமநாத் உள்பட 7 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் ஹேமாநாத் விடுதலை செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் என்பவர் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவருடைய மனுவில், ‘விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக விசாரணை செய்யவில்லை என்றும் எனவே ஹேம்நாத் விடுதலையை ரத்து செய்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார் பந்தயத்தில் கலந்து கொள்வது மட்டுமல்ல.. அஜித் குறித்து சுரேஷ் சந்திரா கூறிய வேற லெவல் தகவல்..!

நடிகர் அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்

என்னுடைய கடைசி காலம் வரை நடிப்பனு ஜோசியர் சொன்னார் .. . வெண்ணிறஆடை மூர்த்தி

நகைச்சுவை உணர்வுக்கு இவர்தான் டெப்போ, இரட்டை வசன அர்த்தங்களுக்கு முகவரி , இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை..!

இதோட நிறுத்திக் கொள்ளுங்கள் என பிரபல நடிகை, ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேல் இதுதான் டிரெண்ட்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் புகைப்படங்கள்..!

இனிமேல் இதுதான் டிரெண்ட் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்

ரஜினியின் 'வேட்டையன்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்'  திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும்