இறந்து கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள்: அரசு தீர்வு காண விவேக் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

தமிழகத்தில் விவசாயம் மற்றும் சினிமா ஆகிய இரண்டு இறந்து கொண்டிருப்பதாகவும் இந்த இரண்டையும் அரசு தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என்றும் நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள். இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு, fdfs இணைய விமர்சனங்கள், கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை' என்று கூறியுள்ளார்

ஒரு பக்கம் ஜிஎஸ்டி உள்பட 4 கோரிக்கைகளுக்காக சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் புதிய வெளியீடு இல்லை, படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்த வேலையும் இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்து வருகிறது. இதற்கு அரசு தலையிடாமல் தீர்வு இல்லை என்பதையே விவேக்கின் டுவீட் சுட்டிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு

குரங்கணி காட்டுப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் சென்றவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சிக்கியதால் சம்பவ தினத்தன்றே 11 பேர் பரிதாபமாக தீயில் கருகி மரணம் அடைந்தனர்.

தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தம் தெரிவித்த ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே தைரியமுள்ள நடிகைகளில் மிகச்சிலரில் ஒருவர் என்பதையும், சமீபத்தில் அவர் தன்னிடம் வாலாட்டிய ஒரு பிரபல நடிகரின் கன்னத்தில் அறைந்த சம்பவத்தை கூறினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

செய்தியாளர்களின் கேமிராவை உடைத்து சண்டை போட்ட ஷமியின் மனைவி

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் தனது கணவரின் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் திடுக்கிடும் பல குற்றச்சாட்டுக்களை கூறினார்.

சுசீந்திரனின் 'ஏஞ்சலினா' குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் கடந்த சில மாதங்களாக 'ஏஞ்சலினா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்

உண்மை சம்பவ த்ரில் படத்தில் வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார்.