பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை!!!

 

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் வைக்கப்பட்டு இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் இந்தச்சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது. இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள் என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் விவேக் ஓபராயின் மைத்துனர் ஒருவருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட உடனே அவர் தலை மறைவு ஆகிவிட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

More News

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்!!!

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்வதற்குத் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளே காரணம் எனப் புகழப்படுகிறது.

டிரைவரே இல்லாமல் சாலையில் ஒடிய கார்… மண்டையைப் பிய்த்துக் கொண்ட பயணிகள்!!! நடந்தது என்ன???

நமது தமிழகத்தின் எங்கோ ஒரு நெடுஞ்சாலையில் பழைய மாடல் கார் ஒன்று, டிரைவரே இல்லாமல் ஓடும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது

ஒரு வருஷமா கழிவறைக்குள் அடைக்கப்பட்ட பெண்… கணவனின் வெறிச்செயல்!!!

அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

ரூ.6.50 லட்சம் சொத்து வரி: ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்டிருந்த சொத்து வரியை குறைக்க வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்

எவன் அவன்? அர்ச்சனாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மோதாத போட்டியாளர் யாருமே இல்லை என்ற நிலையில் இன்று காலை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ஜே அர்ச்சனா,