close
Choose your channels

ஊட்டியில் மரங்கள் இருந்தும் பயனில்லை: வெற்றிமாறனுக்கு விவேக் பதிலடி!

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விவேக் திரைப்படங்களில் நடித்து கொண்டிருப்பதோடு அவ்வப்போது மரங்கள் நடும் சமூக பணியையும் செய்து கொண்டிருக்கின்றார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதியான இன்று ஊட்டியில் மரங்கள் நடும் விழாவில் கலந்து கொள்ள போவதாகவும், அருகில் இருக்கும் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்றும் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு வெற்றிமாறன் என்ற டுவிட்டர் பயனாளி கூறுகையில், 'ஊட்டியில் நிறைய மரங்கள் உள்ளது. எனவே மரங்கள் இல்லாத பகுதிகளில் கவனம் செலுத்தி அதிக மரங்களை நடலாம்' என்று கருத்து தெரிவித்திருந்தார்.

டுவிட்டர் பயனாளி வெற்றிமாறனுக்கு பதிலளித்த விவேக், 'ஊட்டியில் நிறைய மரங்கள் இருக்கலாம். ஆனால் மழை இல்லை. காரணம் யூக்கலிப்ட் சில்வர்ஓக், கிருத்துமசு மரங்களால் மழையை ஈர்க்க முடியாது. அவை நிலத்தடி நீரை உரிஞ்சுவதோடு அதை ஆவியாக்குவதும் இல்லை. மலை நாட்டு மரங்கள் நடப்பட வேண்டும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment