நாளை முதல் 'விஸ்வாசம்' திருவிழா ஆரம்பம்?

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 'விஸ்வாசம்' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அனேகமாக இந்த படத்தின் டீசர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம். மேலும் நாளை முதல் விஸ்வாசம்' திருவிழா தொடங்கவுள்ளதாவும் இனி அடிக்கடி 'விஸ்வாசம்' குறித்த செய்திகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் தான் சமீபத்தில் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: 3 பேருக்கு தூக்கு தண்டனை

தேனி அருகே 5ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த 10 வயது சிறுமியை மூன்று பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கமல் வைத்த பார்ட்டியில் யாஷிகா-ஐஸ்வர்யா கலந்து கொள்ளாதது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறுடன் முடிவடைந்து அதில் ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு பெற்றார் என்பது தெரிந்ததே. ஐஸ்வர்யாவுக்கு இரண்டாமிடமும் விஜயலட்சுமிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

பாராளுமன்ற தேர்தலில் ரஜினிக்கு எத்தனை தொகுதி? ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் செய்து வரும் நிலையில் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்

பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்

கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு இளம்பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.