எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு மாணவர்கள், ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். மீண்டும் எனது மாநிலம் எழுச்சி பெற்றது குறித்து பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் மேலும் கூறியதாவது: ஜல்லிக்கட்டு என்பது எங்களது கலாச்சார அடையாளம். அதற்கு மரியாதை தர வேண்டும்.விலங்குகளை கொடுமைப்படுத்த கூடாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் ஜல்லிக்கட்டு என்பது விலங்குகளை கொடுமைப்படுத்துவது அல்ல. அது எங்கள் பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரம்.
"எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக. தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் நவீனமாகவும் அதே சமயம் கலாச்சார வேர்களை விடாதவர்களாகவும் இருக்கின்றார்கள்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More News

'மிக்சர்' சாப்பிட்ட அந்த நடிகர் யார்? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை, அவர் மிக்சர் சாப்பிடுவதை போல மீம்கள் சமூக வலைத்தளங்களில

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. சென்னை மெரினாவில் ஆரம்பித்த சிறு பொறி இன்று உலகம் முழுவதும் பற்றி எரிகிறது. ஒவ்வொரு துறையாக ஆதரவு கொடுத்து கொண்டே வருவதால் போராட்டத்தின் தீவிரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது

தடைகளை உடை. புதிய சரித்திரம் படை. நடிகர் சந்தானம்

சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில் தற்போது நடிகர் சந்தானமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்...

இந்த போராட்டம் சத்யாகிரகத்தை ஞாபகப்படுத்துகிறது. பிரபல இசையமைப்பாளர்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பீட்டாவுக்கு தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை மெரீனாவில் இளளஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மூன்றாவது நாளாக தொடரந்து வருகிறது...