அஜித்தை வைத்து 'பில்லா 3' இயக்குவீர்களா? இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில்!

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

அஜித் நடித்த ’பில்லா’ மற்றும் ’பில்லா 2’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’பில்லா’ படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில் கூறியுள்ளார்

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கிய Shershaah என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும், இந்தப்படம் கார்கில் போர் பற்றிய கதையம்சம் கொண்டது என்றும் கார்கில் போரில் பங்கு பெற்ற விக்ரம் பலத்ராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து ’பில்லா 3’ படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த போது ’நாங்கள் எதையும் திட்டமிட்டு செய்வதில்லை; அதனால் இது போன்ற படங்களைப் பற்றி ஆழமாக ஆராய்ச்சி செய்வதை நிறுத்தி விடுங்கள். அவ்வாறு நீங்கள் நிறுத்தினாலே அனைத்தும் நன்றாக நடக்கும் என்று கூறினார்

இயக்குனர் விஷ்ணுவர்தனின் இந்த பதிலில் இருந்து ’பில்லா 3’ படம் எடுக்கும் திட்டம் எதுவும் விஷ்ணுவர்த்தனிடம் இல்லை என்று தெரிகிறது. மேலும் ’பில்லா’ படத்தை அடுத்து பில்லா-2 திரைப்படத்தையே விஷ்ணுவர்த்தன் இயக்கவில்லை என்பதும் அந்த படத்தை சக்ரி டோலட்டி என்பவர் தான் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.