ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த விஷ்ணுவிஷால்: விரைவில் திருமணமா?

  • IndiaGlitz, [Monday,September 07 2020]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஆர்யான் என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் நடிகர் விஷ்ணு விஷால் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் கூறப்பட்டது. பிறந்த நாளின்போதும், புத்தாண்டின்போதும் இருவரும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இந்த நிலையில் சற்று முன்னர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஜூவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இன்று ஜூவாலாவின் பிறந்தநாள் என்பதால் இது பிறந்தநாளுக்கான பரிசு மோதிரமா? அல்லது நிச்சயதார்த்த மோதிரமா? என்ற கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

விஷ்ணு விஷால் ஜுவாலா கட்டாவுக்கு மோதிரம் அணிவித்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

More News

தலைவன் தோனி இருக்க பயமேன்: சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி பேட்டி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் திடீரென அணியில் இருந்து விலகியது ஆகியவை

33 வயது மாப்பிள்ளையா? பிளேடால் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை!

தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்கு 33 வயது என்பதால் அவரை பிடிக்கவில்லை என்று கூறிய கல்லூரி மாணவி ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

என்றும் இளமையாக இருக்க நம்ம ஊரு ஊட்டச்சத்து உணவு… தமிழிசை சௌந்திரராஜன் பரிந்துரை!!!

கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சிக்காக நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்க அழைப்பு விடுத்தார்.

பப்ஜி தடை எதிரொலி: 21 வயது ஐஐடி மாணவர் தற்கொலை!

கடந்த சில வாரங்களாகவே இந்திய மற்றும் சீன நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து சீனாவின் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது

இட்லி, வடை, சாம்பார் சாதம்: சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதியின் சாப்பாடு!

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதிக்கு காலையில் இட்லி வடை, மதியம் சாம்பார் சாதம் அளிக்கப்படுவதாக ஜெயில் வட்டாரங்களிலிருந்து