சூரியுடனான பிரச்சனை என்ன ஆச்சு? மனம் திறந்த விஷ்ணு விஷால்..!

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

நடிகர் சூரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஷ்ணு விஷாலின் தந்தை நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த பிரச்சனை எங்களுக்குள் சுமூகமாக முடிந்துவிட்டது என விஷ்ணு விஷால் மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது என்னுடைய நண்பர் சூரியை நான் சமீபத்தில் சந்தித்து எல்லா விஷயத்தையும் பேசினோம். எங்களிடையே இருந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது. இது குறித்த விவரங்கள் இன்னும் கொஞ்ச நாளில் ஊடகத்துக்கு தெரிவிப்போம்.

வாழ்க்கையில் சில குழப்பங்கள் நடக்கத்தான் செய்யும், அதை எப்படி தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் தான் நம் முயற்சிகள் இருக்க வேண்டும். நாம் வாழ்வது ஒரு குறுகிய வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளை செய்து கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை.

இந்த பிரச்சனையால் எங்கள் அப்பா கொஞ்சம் பாதித்துவிட்டார் ஆனால் சூரி உடன் நேரடியாக பேசிய போது அவருடைய நிலைமையும் எங்களுக்கும், எங்களுடைய நிலைமை அவருக்கும் புரிந்தது. இரண்டு பேருக்கும் ஒரு விஷயம் புரிந்தது என்னவென்றால் மூன்றாவது ஆக ஒருவர் வந்து இதில் விளையாடிவிட்டார் என்பது தான்.

எங்கள் இருவர் நட்புக்குள் மூன்றாவது ஒருவருக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த விஷயத்தை அவரும் புரிந்து கொண்டார்’ என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இதனையடுத்து சூரி மற்றும் விஷ்ணு விஷால் தந்தை இடையில் ஆன பிரச்சனை முடிந்து விட்டதாக கருதப்படுகிறது.

 

More News

நாளை அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சூப்பர் அறிவிப்பு வரப்போகுது..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு நாளை காலை 9.09 மணிக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.  

மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார்.. பிரபல ஒளிப்பதிவாளரின் பதிவு.. நெட்டிசன்ஸ் ரியாக்சன் என்ன?

மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார்  என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவரது பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.  

வடபழனி முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனருக்கு திருமணம்.. மணமகள் எம்.இ.பட்டதாரி..!

தமிழ் திரைப்பட இயக்குனர் சென்னை வடபழனி முருகன் கோயிலில் எம்இ பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரம்.. ஆபாச நடிகருடன் நடித்த பிரபல நடிகருக்கு கண்டனம்..!

பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரத்தில் ஆபாச நடிகருடன் இணைந்து பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ள நிலையில்  அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித்.. இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்பா?

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கினார்.