விஷால்-தமன்னா படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

  • IndiaGlitz, [Friday,January 25 2019]

விஷால், தமன்னா நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு 'கத்திச்சண்டை' என்ற திரைப்படம் வெளிவந்த நிலையில் மிண்டும் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். 'ஆம்பள' படத்திற்கு பின் விஷால் படத்தை மீண்டும் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி முதல் சுந்தர் சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதே பிப்ரவரி மாதம் தான் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் தற்போது வெங்கட்மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைய நிலையில் அதன்பின் விஷால், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.