தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,December 24 2017]

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவை திணறடித்ததோடு, திமுகவை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன்னர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அபார வெற்றி பெற்றிருக்கும் திரு தினகரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியை பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.  திரு. தினகரன் அவர்கள் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற திரு. தினகரன் அவர்களுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற திரு. தினகரன் அவர்கள் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும்  தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

More News

வெற்றி பெறும் முன்பே விக்கிபீடியாவில் இடம்பிடித்த தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணி முடிக்கப்பட்டுள்ள 8 சுற்றுகளிலும் தற்போது எண்ணப்பட்டு வரும் ஒன்பவதாவது சுற்றிலும் முன்னிலை வகித்து வருகிறார்

சன்னிலியோனின் முதல் தமிழ் படத்தின் டைட்டிலை தெரிந்து கொள்ள வேண்டுமா?

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் முக்கிய வேடத்தில் நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கவுள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

பாஜகவை பின்னுக்கு தள்ளிய நோட்டா: சுப்பிரமணியன் சுவாமி வேதனை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருவது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி: ஜெ.வை விட அதிக வாக்கு வித்தியாசம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ண தொடங்கிய நிலையில் முதல் சுற்றில் இருந்தே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார்.

இன்று எம்ஜிஆரின் 30வது நினைவு நாள்: நடிகர் சங்க உறுப்பினர்கள் அஞ்சலி

எம்ஜிஆர் அவர்கள் கடந்த 1987ஆம் ஆண்டு இதே நாளில் தான் காலமானார். அவர் மரணம் அடைந்து 30 ஆண்டுகள் ஆகியதை அடுத்து 30வது நினைவு நாளில் அதிமுகவினர் உள்பட பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.