பொதுமக்களுக்கு விஷால் கட்டிக்கொடுத்த 5 கழிப்பிடங்கள்

  • IndiaGlitz, [Sunday,February 21 2016]

நடிகர் விஷால் நடித்து வரும் 'மருது' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இராஜபாளையம் பகுதியில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு சிறுகாயம் ஏற்பட்டதாகவும், உடனே அந்த பகுதியில் இருந்த பெண்களே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன


தன்னை ஒரு நடிகராக மட்டுமின்றி தங்களுடைய குடும்பத்திலும் ஒருவராக பார்க்கும் அந்த பகுதி மக்களுக்கு விஷால் ஒரு சமூக சேவையை செய்துவந்துள்ளார். பொதுமக்களின் கட்டாய தேவையான கழிப்பிடங்களை அந்த பகுதியில் கட்ட முடிவு செய்த விஷால், இராஜபாளையம் பகுதியின் அதிகாரிகள் மற்றும் பெரிய மனிதர்களின் உதவியுடன் ஐந்து கழிப்பிடங்களை கட்டி முடித்துள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பயனடைவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள 'மருது' படத்தின் முடிவடைந்ததை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் துவங்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தை வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே தினத்தில்தான் விஜய்யின் 'தெறி' படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.