விஷால்-சிம்பு திடீர் சந்திப்பு! முக்கிய ஆலோசனை

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் விஷால் மற்றும் சிம்பு. மேலும் சமீபத்தில் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட விஷால் முயற்சித்ததாகவும் வதந்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் முன்னணி நடிகர்களுடன் நடிகர் சங்கம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இதில் நாசர், விஷால், கார்த்தி, சிம்பு, அரவிந்தசாமி, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தின் ஸ்டில்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதில் சிம்புவின் தோள்மீது விஷால் கைபோட்டு, கார்த்தியுடன் ஆலோசனை செய்வது போன்ற ஒரு ஸ்டில் வெளிவந்துள்ளது. எதிரும் புதிருமாக இருந்த விஷால், சிம்பு தங்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகளை மறந்து திரையுலகின் நன்மைக்காக ஒற்றுமையாகியுள்ளது, தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையை நோக்கி செல்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக காணப்படுகிறது.

More News

மகாராஷ்டிராவிலும் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்

புனே மைதானத்தை இந்த சீசனின் 'ஹோம்' கிரவுண்டாக ஏற்றுக்கொண்டாலும், ஐபிஎல்

முடிவடையும் நிலையில் பிரியா பவானிசங்கரின் அடுத்த படம்

பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து கொண்டிருந்த நடிகை பிரியா பவானிசங்கர், நேற்று வெளியான 'மெர்க்குரி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தா? திடுக்கிடும் தகவல்

அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றில் பணிபுரிந்த நிர்மலாதேவி, அந்த கல்லூரியில் படித்து வரும் நான்கு மாணவிகளை தவறான பாதையில் கொண்டு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

அரவிந்தசாமியுடன் இணையும் விக்ரம்பிரபு

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கின்றது.

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிம்பு

சமீபத்தில் சீமானை கைது செய்யப் போவதாக ஒரு  வதந்தி பரவியதை அடுத்து நாம் தமிழர் கட்சியினர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.