நடிகர் சங்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும்: விஷால் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர் விரைவில் மாற்றப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சங்கத்தின் தேர்தலில் பதிவான வாக்குகள் சமீபத்தில் எண்ணப்பட்டு பாண்டவர் அணி வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி மற்றும் துணை தலைவர்களாக கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் நேற்று பதவி ஏற்றனர். முன்னதாக நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் முதல் பணியாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை முடிக்கும் பணி தொடங்க இருப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து பேட்டியளித்த விஷால், ‘நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முழுவீச்சில் தொடங்கப்படும் என்றும் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடித்தவுடன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

எனவே ஏற்கனவே தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என முன்னணி நடிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் விரைவில் இந்த பெயர் மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல வில்லன் நடிகரின் மனைவியா நடிகை மாளவிகா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

பிரபல வில்லன் நடிகரின் மனைவி மாளவிகாவின் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வயதாகிறது. 

அஜித்தை அடுத்து விஜய்யுடனும் இணைந்த உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

அஜித்தை அடுத்து விஜய்யுடன் உதயநிதி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் இணையும் இரண்டு பிரபலங்கள்?

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்த படத்தின் அட்டகாசமான டீசர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

இனிமேல் ஒரே அணி தான்: பாரதிராஜாவின் வாழ்த்து செய்தி!

 நடிகர் சங்கம் தேர்தல் நேரத்தில் இரண்டு அணிகளாக போட்டியிட்டாலும் தேர்தல் முடிந்த பின்னர் ஒரே அணியாக தான் செயல்பட வேண்டும் என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .