இந்த 3 நடிகர்களுக்கு திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கு திருமணம்.. விஷால் பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயது ஆகும் நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் தான் திருமணம் என்று அவர் உறுதியாக இருப்பதாக பல பேட்டிகளில் கூறி இருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட தனது கடமைகள் அனைத்தும் முடிந்த பின்னர் தான் திருமணம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் அளித்த பேட்டியின் போது விஷால் ’இந்த மூன்று நடிகர்களுக்கும் திருமணம் ஆன பின்னர் தான் எனக்கு திருமணம் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் குறிப்பிட்ட அந்த மூன்று நடிகர்கள் சல்மான் கான், சிம்பு மற்றும் பிரபாஸ் ஆகியோர் ஆகும்.

சல்மான் கானுக்கு இப்போதே 58 வயதாகி விட்டதால் அவர் இனிமேல் திருமணம் செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் சிம்புவுக்கு தற்போது 41 வயதாகும் நிலையில் அவரது வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகுந்த பெண் கிடைத்தவுடன் திருமணம் என்று கூறி இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் 44 வயதாகும் பிரபாஸ் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய உறவு உருவாக போவதாக கூறியிருப்பதை அடுத்து அவரது திருமணம் மிக விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஷால் மேற்கண்ட 3 நடிகர்களை குறிப்பிட்டதால் அவரது திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது.

 

More News

'குக் வித் கோமாளி' இர்பான் வைத்த பார்ட்டியில் பிக்பாஸ் மாயா.. சட்டவிரோத செயலை செய்தாரா?

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் இர்பான் துபாயில் வைத்த ஒரு பார்ட்டியில் பிக்பாஸ் மாயா கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த  பார்ட்டியில்

தமிழக மக்களுக்கு மேலும் ஒரு இலவச சேவை.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்த உத்தரவு..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் சார்பாக பல இலவச சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்.. இன்னொரு மாஸ் அப்டேட்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2 ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள்

'தக்லைஃப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைந்த 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும்,

கமல்ஹாசனின் 'கல்கி 2898ஏடி' திரைப்படத்தில் திடீரென இணைந்த கீர்த்தி சுரேஷ்.. என்ன கேரக்டர்?

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898ஏடி' திரைப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள