போராளி என்ற வார்த்தைக்கு சொந்தமானவர் கருணாநிதி: விஷால்

  • IndiaGlitz, [Monday,July 30 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நேற்றிரவு தற்காலிக பின்னடைவில் இருந்ததாகவும், தற்போது சீராக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசு தலைவர் முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரை காவேரி மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பல திரையுலக பிரமுகர்களும், நடிகர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு சென்று அறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கருணாநிதி குறித்து நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்த நிமிடத்தில் இருந்து போராளி என்ற வார்த்தை கலைஞர் கருணாநிதிக்கு சொந்தமானது. இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த நாள்வரை அந்த வார்த்தையை அவர் கூறி வருகிறார். அவர் ஒருபோதும் தனது நம்பிக்கையை இழக்காமல் வாழ்ந்து வருகிறார். என்ன உத்வேகமான மனிதர். வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் வித்தியாசமான கோணத்தில் நீங்கள் எனக்கு வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.,

More News

த்ரிஷாவின் 'மோகினி' சென்னை ஓப்பனிங் வசூல் எப்படி

பிரபல நடிகை த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்த 'மோகினி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' அசத்தலான ஓப்பனிங் வசூல்

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் கோகுல் இயக்கிய 'ஜூங்கா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாலிவுட் திரையுலகை வியக்க வைத்த 'சர்கார்' பட வியாபாரம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது

ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்! என்ன ஆச்சு சங்கத்தின் கட்டுப்பாடு?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கம் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக மூன்று தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும்

பிக்பாஸ் இல்லத்தை விட்டு வெளியேறும் வைஷ்ணவி: ஆனால் திடீர் திருப்பம்

பிக்பாஸ் இல்லத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மனதிலும் எழுந்துள்ளது.