'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள் 'காலா' படம் வெளியானால் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'காலா' படத்திற்கு தடை விதித்தது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கொந்தளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ரஜினி அவர்கள் காவிரி பிரச்னை சம்பந்தமாக கருத்துக்கள் கூறியது அவரது பேச்சு சுதந்திரம். மேலும் அந்த கருத்து போதுநலன் கருதிய ஒன்றாகும். அதற்காக 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது எப்படி சரி? 'காலா' திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாக அம்மாநில திரைப்பட சகோதரர்கள் பேசி தீர்வு காணவேண்டும். ஏன் என்றால் நாம் எல்லோரும் இந்தியர்களே! என்று கூறியுள்ளார்.

More News

போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது

ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில்

தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. காயமடைந்த தூத்துகுடி நபர் உணர்ச்சிவசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார் என்பது தெரிந்ததே.

ஜோதிகாவின் அடுத்தபடத்தின் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க செவந்த வானம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.