19 பாடகர்கள் பாடிய சென்னை பாடல். விஷால் வெளியிட்டார்

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னையே தத்தளித்தது. இந்நிலையில் கோலிவுட் பிரமுகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி நிவாரண பணிகளுக்கு பெரும் உதவி செய்தனர். குறிப்பாக விஷால், கார்த்தி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, இளையராஜா, உள்பட பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த நிவாரண உதவிகள் மகத்தானது.


இந்நிலையில் வெள்ளத்தால் மூழ்கிய சென்னை மீண்டும் முன்புபோல மீண்டும் வரவேண்டும் என்ற நோக்கத்தில் 'சென்னையே மீண்டு வா' என்ற வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பா.விஜய் எழுத சத்யன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை சீர்காழி சிவசிதம்பரம், உன்னிகிருஷ்ணன், மனோ, க்ரிஷ், அனிதா, சத்யன் மகாலிங்கம், பிரசன்னாராவ், கிருஷ்ணராஜ், திப்பு, ஹரினி, முகேஷ், ப்ரியா ஹேமேஷ், மிஷ்கின், அனந்து, திவாகர், டி.எல்.மஹாராஜன், சாம் பி.கீர்த்தன், பேபி சுதந்த்ரா உள்பட 19 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடலை பி.எல்தேனப்பன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்திற்கு முன்பு இருந்த சென்னையை மீண்டும் கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சென்னையை மீட்டெடுப்பது சென்னையில் உள்ள ஒவ்வொருவரின் கடமை என்றும் இந்த வீடியோவை வெளியிட்ட நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

More News

ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் கலைஞர்

2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில்...

சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை...

மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார்...

2015-ல் சின்ன பட்ஜெட்டில் வெளியான சிறப்பான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து படம் எடுக்கும் டிரெண்ட் தற்போது வந்துவிட்டது. ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்றால் திரையில் பிரமாண்டத்தை காட்ட வேண்டும், அந்த பிரமாண்டத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற...