விஷால்-பாண்டியராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,September 18 2015]

ஒருபுறம் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பணியில் நடிகர் விஷால் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் படப்பிடிப்பிலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ரிலீஸான 'பாயும் புலி' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், அவர் தற்போது பாண்டியராஜின் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஷால்-பாண்டியராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை தற்போது இயக்குனர் இறுதி செய்தி அதை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு அவர் தேர்வு செய்த டைட்டில் 'கதகளி'. ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு 'கதகளி' டைட்டில் மிகப்பொருத்தமானது என்று கூறி பலர் பாண்டியராஜுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பசங்க புரடொக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக 'மெட்ராஸ்' நாயகி கேதரின் தெரசா நடித்து வருகிறார்.

More News

சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்தும் 'புலி' படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்வதை இன்றைய நாளிதழ் விளம்பரங்கள் உறுதி செய்துள்ளது......

விஷ்ணு படத்தின் ஹீரோயின் ஆகிறாரா அமலாபால்?

'மைனா' நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்த பின்னரும் திரையுலகில் இருந்து விலகாமல் சூர்யாவுடன் நடித்த 'பசங்க 2' படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது....

ஜெயம் சகோதரர்களின் படம் பார்த்த சூர்யா சகோதரர்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஜெயம் சகோதரர்களின் 'தனி ஒருவன்' திரைப்படம் நான்காவது வாரமாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது....

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு மே மாதம் பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் இணைந்தார். அவருடைய சமூக வலைத்தளத்தை 2.28 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர்....

விக்ரமை இயக்குவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...