ரஜினி, கமல், விஜய்யை அடுத்து சூர்யாவை சந்தித்த பாண்டவர் அணி

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

< p>தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதிலும் பிசியாக உள்ளனர்.

இந்நிலையில் பாண்டவர் அணி என கூறப்படும் விஷால் அணியின் தேர்தல் பிரச்சாரத்தை சுறுசுறுப்பாக ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் மற்றும் குஷ்பு உள்பட பல முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ள நிலையில் நேற்று மற்றொரு முன்னணி நடிகரான சூர்யாவை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளனர். இந்த சந்திப்பில் சூர்யாவின் சகோதரர் கார்த்தியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நாடக நடிகர்களிடம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஷால் அணியினர் திரைப்பட நடிகர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், நடிகர் சங்க பொறுப்புகளை எந்த அணி கைப்பற்றும் என்பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.