close
Choose your channels

கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

Wednesday, August 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலையில் நடிகர் விஷால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி என்னும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை அவர் முறையாக வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது

இந்த குற்றச்சாட்டு குறித்து விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் அவர் மீது வருமான வரித்துறையினர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் விஷால் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு எதிராக கைது வாரன்D பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

அதன்படி இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment