சொன்னதை செய்தார் விஷால். ஒரு ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 18 2016]

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகளே கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் இந்த காலத்தில் விஷால் சில மாதங்களுக்கு முன் தான் கலந்து கொண்ட ஒரு விழாவில் கொடுத்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளார்.


கடந்த ஆண்டு மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால் இந்த ஆண்டு நடைபெறும் 12ஆம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மூன்று மாணவர்களின் மேல்படிப்பிற்கான முழு கல்விச்செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் நேற்று 12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தது. விஷால் வாக்குறுதி கொடுத்த மதுரவாயல் பள்ளி மாணவர்களான பத்மப்ரியா ( 1137 / 1200), புவனேஸ்வரி ( 1128/1200), பி.சக்தி ( 1082 /1200) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.

இந்த மாணவர்களின் கல்லூரி படிப்பு செலவுகளை நடிகர் விஷாலின் தேவி அறக்கட்டளை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் மேற்கண்ட அந்த மூன்று மாணவ மாணவிகளையும் விஷால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.