close
Choose your channels

பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் விஷால்

Saturday, November 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் கல்வியின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்றும், பெண்கள் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று மகாகவி சுப்பிரமணிய பாரதி கனவு கண்டார். தனது கனவு மெய்ப்பட வேண்டும் என்று அவர் கவிதை வடிவில் பாடியதை தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தன்னால் இயன்ற அளவுக்கு நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில் பெண் கல்விக்கு விஷால் உதவிய இரண்டு சம்பவங்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது. இதோ அந்த தகவல்கள்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை தெரேசா என்பவர் 2ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் B.Ed., படிப்பு படித்துவருகிறார். மேற்படி, அவர் கல்வி படிப்பை தொடரமுடியாத நிலையில் சிரமத்தில் இருப்பதை அறிந்த உடனே தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்கள் அவருடைய மேற்படிப்பிற்கு தனது தேவி அறக்கட்டளை முலம் உதவி செய்துள்ளார்.
அதேபோன்று போரூர் பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பவரின் மகள் சங்கீதா இவர் சார்ஜாவில் மருத்துவ படிப்பு படித்துவரும் நிலையில் இந்தவருடம் 4ம் ஆண்டு படிப்பை தொடரமுடியாத நிலையில் சிரமத்தில் இருப்பதை அறிந்த உடனே தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்கள் அவருடைய மேற்படிப்பிற்கு தனது தேவி அறக்கட்டளை முலம் உதவினார்.
மேற்கண்ட இரு மாணவிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். விஷாலின் சமூக நல தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment