close
Choose your channels

விஷாலின் மனித நேயத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக நாசர், விஷால், கார்த்தி உள்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நாடக மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து அவர்களுடைய வாழ்வில் ஒளியை ஏற்றி வருகின்றனர் என்பதை அவ்வப்போது வரும் செய்தியின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.


அதுமட்டுமின்றி விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலமாகவும் பல நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு உதவியாக பிரபல நாடக நடிகர் டி.பி.கணேசன் அவர்களின் குடும்பம் பொருளாதார அளவில் கஷ்டப்படுவதை அறிந்து அவருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளார்.

விஷாலின் ரசிகர் மன்ற நிர்வாகி, நாடக நடிகர் டி.பி.கணேசன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவருடைய மனைவி தமிழரசி அவர்களிடம் ரூ.25,000 நிதியுதவியை விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கியுள்ளார். இந்த நிதியுதவி விஷாலின் மனித நேயத்திற்கும், உதவி செய்யும் மனப்பான்மைக்கும் மேலும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment