விஜய் மாதிரி நிறைய சம்பாதிக்கணும், அரசியலுக்கு வரணும்.. விஷால் குறித்து அப்பா ஜிகே ரெட்டியின் கனவு..!

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

விஜய், அஜித், சூர்யா மாதிரி தனது மகன் விஷால் நிறைய சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என்று விஷாலின் அப்பா ஜி கே ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் அரசியல் கட்சி விரைவில் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஷாலின் அப்பா ஜிகே ரெட்டி சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் ’விஷால் சின்ன வயதில் இருந்தே எல்லோருக்கும் உதவி செய்வார், ஏழைகளுக்கு என்றால் கடன் வாங்கியாவது உதவி செய்வார், இப்போது கூட எனது மனைவி தேவியின் பெயரில் அறக்கட்டளை நடத்தி, அதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாக மாற்றும் பணியில் விஷால் இருக்கிறார், கண்டிப்பாக அரசியலுக்கு வருவார், அரசியலில் ஜெயித்தும் காட்டுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் அரசியலுக்கு வரும் முன்பு அவர் விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும், திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும், சம்பாதித்த பணத்தை பிறகு அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்று தெரிவித்தார்.

சிவாஜி, சிரஞ்சீவி உட்பட பலர் அரசியலுக்கு வந்தாலும் சரியான திட்டமிடலுடன் அரசியலுக்கு வரவேண்டும் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பது தான் என் எண்ணம், எனவே விஷால் சரியான நேரத்தில், சரியான திட்டமிடலுடன் அரசியலுக்கு வருவார்’ என்றும் கூறியுள்ளார்.

 

More News

அசோக்செல்வன் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்.. 'ஜெயிலர்' நடிகரும் இணைகிறாரா?

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பெண் இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தள்ளி போகும் 'தக்ஃலைப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. இடையில் என்ன செய்ய போகிறார் கமல்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

சென்னையில் இயக்குநர்  வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. நக்சல்களுடன் தொடர்பா?

சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை என்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'லெஜண்ட் சரவணன்' படத்தை இயக்குவது தனுஷ் பட இயக்குனரா? அவரே கூறிய விளக்கம்..!

பிரபல தொழிலதிபர் 'லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட் 'என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சைதை துரைசாமி மகன் நிச்சயம் திரும்பி வருவார்.. தமிழ் திரைப்பட ஹீரோ நம்பிக்கை..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காணாமல் போன நிலையில் அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்