விஷாலின் டேட்டிங் அனுபவமும் மீடூ பிரச்சனைகளும்

  • IndiaGlitz, [Sunday,November 11 2018]

கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக மீடூ பிரச்சனை குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் 'சில பெண்களுடன் தானும் டேட்டிங் சென்றுள்ளதாகவும், இருவரும் மனமொத்து பழகுவதற்கும், ஒருவரை தவறாக பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது என்றும் விஷால் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த திரைத்துறையாக இருந்தாலும் நடிகைகள் பயமின்றி பாதுகாப்புடன் பணிசெய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய விஷால், 'தன்னுடைய முதல் படத்தில் இருந்து 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்த இரண்டு நாயகிகள் வரை நடிகைகள் பாதுகாப்பாக பணி செய்ததாக கூறினார்

மீடூ என்பது பெண்களிடம் தவறாக நடப்பவர்களை வெளிக்காட்டும் ஒரு அம்சம் என்றாலும் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், காலம் தாழ்ந்து குற்றச்சாட்டு கூறுதல், வாய்ப்பு தருவதாக உறுதியளித்துவிட்டு அது நடக்காமல் போனால் பழிவாங்குவதற்காக மீடூவை ஆயுதமாக எடுக்கும் நிலை மாற வேண்டும் என்றும் கூறினார்.

More News

'சர்கார்' பிரச்சனை குறித்து முதல்முறையாக கருத்து கூறிய முதல்வர் ஈபிஎஸ்

விஜய் நடித்த 'சர்கார்' குறித்து கிட்டத்தட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் விமர்சனம் செய்துவிட்டனர்.

'தல'யுடன் புகைப்படம்: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்நாள் கனவு ஒன்று நனவாகிவிட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஆம், 'தல' தோனியை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகம் செய்த நல்ல விஷயங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் ஓரிரு காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் செய்கின்றனர்.

2ஆம் பாகமாக உருவாகவுள்ள நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம்

கோலிவுட் திரையுலகின் நாயகர்களான ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

அரசு உயரதிகாரியாக மாறிய நடிகை வரலட்சுமி

பிரபல நடிகை வரலட்சுமி நடித்துள்ள மாரி 2' படத்தில் அவருடைய கேரக்டர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்