சிம்பு, விஷால் உறவில் திடீர் திருப்பம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடந்தபோது சிம்பு மற்றும் விஷால் எதிரெதிர் அணியில் போட்டியிட்டு ஒருவரை ஒருவர் காரசாரமாக விமர்சனம் செய்தனர். அதற்கு பின்னரும் இருவரும் கருத்து மோதல்கள் கொண்டிருந்ததாகவும், தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுக்கு பல இடைஞ்சல்கள் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் சிம்புவும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பினர்களும் வெளிப்படையாக பேச வேண்டும், எல்லா விஷயமும் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்று சிம்பு கூறிய கருத்துக்கு விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்திற்கு சிம்பு வருகை தந்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தது குறித்து விஷால் தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டார். நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் சிம்பு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்துடனும், விஷாலுடனும் இனிவரும் காலங்களில் இணக்கமான உறவை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியை சந்தித்து வேலைநிறுத்தம் குறித்து விளக்குவேன்: விஷால்

திரையுலகினர்களின் தொடர் வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் விஷால், விரைவில் ரஜினியை சந்தித்து விளக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

விக்னேஷ்சிவனுடன் இணைந்து விஸ்வரூப திட்டம் போடும் நயன்?

காதல் ஜோடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பறந்துவரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும்

கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை

திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும்

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.