'எங்களுக்கு பிரச்சனை வந்தால் முதலில் நாடுவது கமல்ஹானைத்தான்' - விஷால்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல், த்ரிஷா உள்பட படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய 'தூங்காவனம்' நாயகி த்ரிஷா, எனக்கு ஒரு பெர்சனல் பிரச்சினை வந்தால் கமலிடம் தாராளமாக உதவி கேட்பேன். அவரும் கண்டிப்பாக உதவுவார் என்று கூறினார். இதன்பின்னர் பேசிய விஷால், 'நடிகர்களுக்கு நடிப்பை கற்று கொள்ளும் பல்கலைக்கழகம் உலகநாயகன் கமல் சார், அவர் ஒரு சிறந்த மனிதர் மட்டுமின்றி சமுதாயத்திற்க்காக தன்னை அதிகமாக ஈடு படுத்திகொண்டவர். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் நான் கமல் சாரை தொடர்பு கொண்டு அவரிடம் ஆலோசனை கேட்பேன்' என்று கூறினார்.

பிரபல இயக்குனர் அமீர் பேசியபோது, "கமல்ஹாசன் நடித்த, அவர் ரசிகர்களுக்கே அதிகம் தெரியாத கொல்லிமலை திருடன் என்ற திரைப்படத்தை 30 தடவை பார்த்தேன். அப்படியிருக்கும்போது தூங்காவனத்தை 300 தடவை பார்ப்பேன்' என்று கூறினார்.

பிரபல நகைச்சுவை நடிகர் வையாபுரி பேசும்போது, "25 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு கமல் நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக வேண்டும்' என்று கூறினார்

More News

கமலும் நானும் ஒன்றா? சிம்பு

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...

'புலி' குறித்து அமிதாப் கூறிய த்ரில் கருத்து

விஜய் நடித்த 'புலி' படம் பலவித பிரச்சனைகளை சந்தித்து ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,...

விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படும் நிலையில்...

நடிகர் சங்க தேர்தல்: விஜயகாந்த் ஆதரவு யாருக்கு?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர் தங்கள் அணிகளுக்கு தீவிரமாக ...

அஜீத்தின் 'வேதாளம்': டீசர், பட ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தல' அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் டீசர் ...