விஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,August 21 2018]

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான 'மதகஜ ராஜா' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்களில் 'மதகஜ ராஜா' ஒருசில பிரச்சனைகளால் வெளிவரவில்லை என்றாலும் 'ஆம்பள' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 'கலகலப்பு 2' படத்தை அடுத்து சிம்பு நடிக்கும் படம் ஒன்றை சுந்தர் சி இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஷாலுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது

இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2019 பொங்கலுக்கு பின்னர் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க துருக்கியில் படமாக்கப்பாவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.